சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தையல் ஓர் கூறு உடையான், பண் - சீகாமரம் (கைச்சின்னம் (கச்சன்னம்) கைச்சினநாதர் வேள்வளையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=oTtNwLaUQYc |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.045  
தையல் ஓர் கூறு உடையான்,
பண் - சீகாமரம் (திருத்தலம் கைச்சின்னம் (கச்சன்னம்) ; (திருத்தலம் அருள்தரு வேள்வளையம்மை உடனுறை அருள்மிகு கைச்சினநாதர் திருவடிகள் போற்றி )
தையல் ஓர் கூறு உடையான், தண்மதி சேர் செஞ்சடையான், மை உலாம் மணிமிடற்றான், மறை விளங்கு பாடலான், நெய் உலாம் மூ இலைவேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் கை உடையான், மேவி உறை கோயில் கைச்சினமே. | [1] |
விடம் மல்கு கண்டத்தான், வெள்வளை ஓர் கூறு உடையான், படம் மல்கு பாம்பு அரையான், பற்றாதார் புரம் எரித்தான், நடம் மல்கும் ஆடலினான், நால்மறையோர் பாடலினான், கடம் மல்கு மா உரியான், உறை கோயில் கைச்சினமே. | [2] |
பாடல் ஆர் நால்மறையான்; பைங்கொன்றை பாம்பினொடும் சூடலான், வெண்மதியும் துன்று கரந்தையொடும்; ஆடலான் அங்கை அனல் ஏந்தி; ஆடு அரவக் காடலன்; மேவி உறை கோயில் கைச்சினாமே. | [3] |
பண்டு அமரர் கூடிக் கடைந்த படு கடல் நஞ்சு உண்ட பிரான்' என்று இறைஞ்சி. உம்பர் தொழுது ஏத்த, விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து அவியக் கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே. | [4] |
தேய்ந்து மலி வெண்பிறையான், செய்யதிருமேனியினான், வாய்ந்து இலங்கு வெண்நீற்றான், மாதினை ஓர் கூறு உடையான், சாய்ந்து அமரர் வேண்டத் தடங்கடல் நஞ்சு உண்டு அநங்கைக் காய்ந்த பிரான், மேவி உறை கோயில் கைச்சினமே. | [5] |
மங்கை ஓர் கூறு உடையான், மன்னும் மறை பயின்றான், அங்கை ஓர் வெண்தலையான், ஆடு அரவம் பூண்டு உகந்தான், திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திருமுடிமேல் கங்கையினான், மேவி உறை கோயில் கைச்சினமே. | [6] |
வரி அரவே நாண் ஆக, மால்வரையே வில் ஆக. எரிகணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான். பொரி சுடலை ஈமப் புறங்காட்டான், போர்த்தது ஓர் கரிஉரியான், மேவி உறை கோயில் கைச்சினமே. | [7] |
போது உலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்; மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன் நீதியினால் ஏத்த நிகழ்வித்து, நின்று ஆடும் காதலினான்; மேவி உறை கோயில் கைச்சினாமே. | [8] |
மண்ணினை முன் சென்று இரந்த மாலும், மலரவனும், எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான்; பண் இசையால் ஏத்தப்படுவான்; தன் நெற்றியின்மேல் கண் உடையான்; மேவி உறை கோயில் கைச்சினமே. | [9] |
தண்வயல் சூழ் காழித் தமிழ் ஞானசம்பந்தன், கண்நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை, பண் இசையால் ஏத்திப் பயின்ற இவை வல்லார், விண்ணவராய் ஓங்கி, வியன் உலகம் ஆள்வாரே. | [11] |